தவறுகள்
ஆயிரம் இழைக்கிறேன் -ஆயினும்
அறம்
மேற்கொள்ள துடிக்கிறேன்…ஏன்...நான் மனிதன்!!
வருந்தியதால்
திருந்தி அவ்வருத்தம் போனபின்
திருத்தம்
திருத்தும் நான் மனிதன்
மனத்தால்
கணமும் துன்பம் உருவகித்து
மதியால்
மீள முயலும் நான் மனிதன்
சிந்தை
தந்த அகந்தையில் உலகின்
விந்தை
மறந்த நான் மனிதன்
பணிவாய் உள்ளதை நினைத்து
கர்வம் கொள்ளும் நான் மனிதன்
இன்பமாய்
வாழ துன்பம் கொண்டும் - அத்துன்பத்தின்
நடுவில்
இன்பம் தேடும் நான் மனிதன்
மிருக
குணங்கள் கொண்டினும் 'அகம் பிரம்மாஸ்மி'
என்பதை
உணர விரும்பும் நான் மனிதன்
நான்
எனும் எண்ணம் கொன்ற என்னை
நின்று
தேடும் நான் மனிதன்
பாவம் செய்பவன் பாவி
யோகம் கடந்தவன் யோகி
மத்தியில் தவிக்கிறேன் நான் மனிதன்