கிரகனாதி கிரகனங்கட்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆள் ஒரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காததாம்..
அதைப் பயந்ததை உணர்ந்ததை துதிப்பதுவன்றி...
பிறிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெல்லாம் முன்செய்தது என்றது
விதி ஒன்று செய்வித்ததாம்
அதை வெல்ல முனைவோரை சதி கூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேற்கும் திருமூலமாம்
குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்என்ற
க்ரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புது சென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்ததுபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரப்ரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாறு தொழுசக்தியை
மற்றவர் வையுபயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி அறிவை
ஆத்திக சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை
தையடா ஊசியில் தையென தந்தபின்
தக்கதை தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனத்தபின்
நைவதே நன்றெனின் நை"
- கமலஹாஷன்
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆள் ஒரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காததாம்..
அதைப் பயந்ததை உணர்ந்ததை துதிப்பதுவன்றி...
பிறிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெல்லாம் முன்செய்தது என்றது
விதி ஒன்று செய்வித்ததாம்
அதை வெல்ல முனைவோரை சதி கூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேற்கும் திருமூலமாம்
குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்என்ற
க்ரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புது சென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்ததுபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரப்ரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாறு தொழுசக்தியை
மற்றவர் வையுபயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி அறிவை
ஆத்திக சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை
தையடா ஊசியில் தையென தந்தபின்
தக்கதை தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனத்தபின்
நைவதே நன்றெனின் நை"
- கமலஹாஷன்