செவ்வாய், 22 ஏப்ரல், 2014

உன்னாலே

தூக்கத்தில் கணவாய் வருகிறாய்
விழித்திருக்கையில் தீயாய் சுடுகிறாய்
கண் மூடியதும் காட்சியாய் தோன்றுகிறாய்
நெஞ்சுக்குள் கானமாய் பொழிகிறாய்
அது ஏனோ அது ஏனோ

முகப் புத்தகம் நூறு முறை பார்கிறேன்
உன் முகத்தை ஒரு முறையேனும் பார்த்திட துடிக்கிறேன்
தொலைவில் வருவது நீயாக இருக்காத என தவிக்றேன்
அது ஏனோ அது ஏனோ

இரவில் தூக்கம் இழக்கிறேன்
பகலில் என்னை தொலைக்கிறேன்
காதல் வந்ததா தெரிய வில்லை ஆனால் கவிதை வந்தது
உன்னாலே அது உன்னாலே.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

முரண்படும் ஆசைகள் ஆயிரம்

ஆசைகள் ஆயிரம்!
ஆசைகள் இம்சைகள் ஆனா போதிலும்!!
ஆசைகள் ஆயிரம்!!!

சுற்றம் சூழ வாழ ஆசை 
யாரும் இல்லா தனி தேசம் செல்லவும் ஆசை

சிறகுகள் இன்றி பறந்திட ஆசை
சிற்பமாய் உறைந்திடவும் ஆசை

பில்கேட்ஸாய் உலகம் வாங்க ஆசை
பட்டினத்தார் போல் பாடித் திரிந்திடவும் ஆசை 

நாசா சென்று விஞ்ஞானி ஆக ஆசை
காசி சென்று மெய்ஞானி ஆகவும் ஆசை

கோபியர் கொஞ்சும் கண்ணனாக ஆசை
கம்பர் பாடும் ராமனாக வாழவும் ஆசை

தமிழ் மொழிக்காக பிற மொழியுடன் வாதிட ஆசை
பிற மொழிக்காக தமிழ் மொழியை விடச்செய்யவும் ஆசை

ஆயிரம் களிறு கொன்ற பரணியாக வீறுகொள்ள ஆசை
தரணி வென்ற புத்தனாக சாந்தம் கொள்ளவும் ஆசை

ஊன் சுவைத்து ஊன் வளர்க்க ஆசை
உயிர் மதித்து ஊன் துறக்கவும் ஆசை

ஆசைகள் அனைத்தும் அடைந்திட ஆசை
ஆசைகள் அனைத்தும் துறந்திடவும் ஆசை

சித்தன் முதல் பித்தன் வரை
ஆசையின் பரிணாமங்கள் தான் வேறாகிறது
அந்த வேர் என்றும் மண்ணிலே நிலைகிறது

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

புறநானூறு

உண்டால் அம்ம, இவ்வுலகம் – இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின்; உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
                              -இளம்பெரு வழுதி
---------------------
நம்மில் பலர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் புறநானூறு பாடலை கடந்து வந்திருப்போம். இப்பாடலும் அந்த செய்யுளில் இடம் பெற்ற ஒன்றாகும்,

பாடலின் பொருள்:
தன்னலம் துறந்து வாழ்பவர்கள் இந்திரனின் தேவாமுதம் போன்ற கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தாலும் கூடத் தனக்கென மட்டுமே பதுக்கி,ஒதுக்கி வைத்துக் கொள்ளாதவர்களாகப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.

யாரையும் அவர்களால் வெறுக்கவோ,பகையாளிகளாக ஆக்கிக் கொள்ளவோ முடியாது. எவருமே செய்ய அஞ்சக் கூடிய பழிச் செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாமல் இருப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய செயல்களில் மனச் சோர்வும் சலிப்பும் கொள்ளாமல் தொடர்ந்து இயங்குவர்.

புகழுக்காகத் தங்கள் உயிரையையும் கொடுக்கத் துணியும் அவர்கள் பழி வருமெனின் உலகையே பரிசாகத் தந்தாலும் அப்படி ஒரு செயலைச் செய்யத் துணியாதவர்கள். மனதை எந்த வகையான சஞ்சலங்களுக்கும்,உளைச்சல்களுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாதவர்களாக-எடுத்த காரியம் வெற்றியுடன் முடிய வேண்டுமென்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே உறுதியுடன் இயங்குவர். தனது முயற்சிகளை,சக்திகளைப் பிறருக்காகவே அர்ப்பணித்து வாழும் அத்தகைய மாண்பிற்குரியாளர்களால்தான் உலகம் சுழல்கிறது என்கிறது பாடல்