வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நாத்திகம் போற்றாதே



நாத்திகம் நாடாதே நண்பா
உயர் கடவுள் படைத்திடும் வழி
ஒன்று உண்டு காணீர்

அன்பின் உச்சம் அகத்தே உயிர்த்து
பண்பின் வழி அதை 'பார்'க்கு கொடுத்து

அடையாளம் யாவும் 'அவிந்து' உடைத்து
உண்மைக்கு உருவம் நல்கும்
அறவோன் யாவனும் 'இறைவனே'

எது இழிவு

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.
------------------------------------------------

பொருல்: ஒருவர் ஒரு பொருளைத் தருக என்று மற்றொருவரிடத்தில் இரத்தல் என்பது இழிவான செயலாகும்! அவ்வாறு இரந்தோர்க்கு யாதொரு பொருளையும் தரமாட்டேன் என்று மறுத்துக் கூறுதல் என்பது, மேற்குறிப்பிட்ட இழிவைக் காட்டிலும், மிகவும் இழிவான ஒரு செயலாகும்.

அதே போல் பிறர்க்கு கொடுப்பது சிறப்பானது; அதை பெருந்தன்மையாக மறுத்தல் அதனினும் சிறப்பு.

இங்கு 'அன்று' என்பது 'இல்லை' எனும் பொருளில் வரவில்லை. ஒரு அசைச் சொல்லாக வந்துள்ளது