எந்த பெண்ணின் கூந்தலை கண்டும் பயப்படாமல் வளர்ந்து நிற்க்கும்
பூக்கள் போல
எந்த சமூகத்தை கண்டும் பயப்படாமல் வாழ நினைத்து,
யானை அங்குசம் கண்டு
மிரள்வது போல்
சமூகத்தின் அங்குசம் கண்டு
அவன் மிரண்டு,
தச்சன் கழித்த மரத்துகள் கொல்லனுக்கு பயன்படுவது போல்
அவன் கழித்த கனவுகள்
யாருக்காயினும் பயன்படும்
என நினைத்து,
அடிமைகளோடு அடிமையாய்
உணர்ச்சிகள் அற்ற ஒரு பிரேதத்தை
கொண்டு மிகப் பிரமாதமாய் நடித்து கொண்டிருக்கிறான்.
அவன் சமூகமும் அப்படியே.
#1
எந்த பூனையும் எந்த தேசம் போனாலும் பூனையாகவே இருக்கிறது
அவன் மட்டும் அப்படி அல்ல,
அவன் சமூகமும் அப்படியே.
#2
தேங்கி கிடக்க வெட்கப்பட்டு ஆறுகள்
விரைவாக வற்றிவிட ஆசைப்படுகிறது.
சமூகத்தில் தேங்கி கிடக்க அவன்
ஒருபோதும் வெட்கம் கொள்ளவில்லை
அவனும் அப்படியே
அவன் சமூகமும் அப்படியே
#3
-தோழர் அஜீக் தமிழ்
பூக்கள் போல
எந்த சமூகத்தை கண்டும் பயப்படாமல் வாழ நினைத்து,
யானை அங்குசம் கண்டு
மிரள்வது போல்
சமூகத்தின் அங்குசம் கண்டு
அவன் மிரண்டு,
தச்சன் கழித்த மரத்துகள் கொல்லனுக்கு பயன்படுவது போல்
அவன் கழித்த கனவுகள்
யாருக்காயினும் பயன்படும்
என நினைத்து,
அடிமைகளோடு அடிமையாய்
உணர்ச்சிகள் அற்ற ஒரு பிரேதத்தை
கொண்டு மிகப் பிரமாதமாய் நடித்து கொண்டிருக்கிறான்.
அவன் சமூகமும் அப்படியே.
#1
எந்த பூனையும் எந்த தேசம் போனாலும் பூனையாகவே இருக்கிறது
அவன் மட்டும் அப்படி அல்ல,
அவன் சமூகமும் அப்படியே.
#2
தேங்கி கிடக்க வெட்கப்பட்டு ஆறுகள்
விரைவாக வற்றிவிட ஆசைப்படுகிறது.
சமூகத்தில் தேங்கி கிடக்க அவன்
ஒருபோதும் வெட்கம் கொள்ளவில்லை
அவனும் அப்படியே
அவன் சமூகமும் அப்படியே
#3
-தோழர் அஜீக் தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக