ஞாயிறு, 18 மே, 2014

தென்பாண்டி சிங்கம்

வருகுதையா மறவர் படை
வானவில் சேனைத்தளம்
மறவனோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்
கையிலே வீச்சருவாள்
காலிலே வீர தண்டை
நெற்றியில் பொட்டு வைத்து
நீல வண்ண பட்டுடுத்தி
தோளே வாளான துடியான வீரனடா

தென்பாண்டி சிங்கமடா
தேன் தமிழ் பாடும் தங்கமடா
வரி புலியின் வர்க்கமடா
அந்த வரியோரின் சொந்தமடா
படை நடுங்கும் தோள்களடா
இந்த பகைவரின் மனமும் பதைக்குமடா
வைரம் பாஞ்ச நெஞ்சமடா
இவன் வாள் எடுத்தால் வரும் வாகையடா
                                                          [தென் பாண்டி ]

இருநூறு வருஷம் முன்னே இனம் மானம் காத்தவன்டா
வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா
                                                               [இருநூறு வருஷம்]
உமை துரைக்கு தான் உற்ற நண்பனாம்
சீமை துரைகளுக்கு அவன் சிம்ம சொப்பனம்
                                                          [தென் பாண்டி ]    
கை வளரி வீசி விட்டால் கைலாசம் கலங்குமடா
வேல் கம்பு விட்டெறிந்தால்
வெண்ணிலவில் தைக்குமடா
வானத்தை கீறி உனக்கு வைகரைய பரிசளிப்பான்
மானம் காக்கும் மறவனடா
நம்ம மருது பாண்டியர் தோழனடா
                                                    [தென் பாண்டி ]
-------------------------------------------------------------------------
தென்பாண்டி சிங்கம் என்ற தொலைக்காட்சி தொடரின்
பாடல் .எழுதியவர் கலைஞர் கருணாநிதி
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்து
அவரே பாடிய பாடல்.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக