செவ்வாய், 4 மார்ச், 2014

இல்லாமை

வாழ்வின் பொருள் கண்டவன்
பொருளில் வாழ்வை தேடுவதில்லை 
தன்னை உணர்ந்தவன் -பிறர் 
பிழை பார்ப்பதில்லை

காலத்தின் இயல்பு அறிந்தவன்
சுகதுக்கம் அடைவதில்லை
இல்லாமை வலி உணர்ந்தவன்
இல்லை என்று உரைப்பதில்லை
தேடல் உள்ளம் கொண்டவன்
அயர்வு அடைவதில்லை

உண்மை தேடும் மனம் 
முகமூடி அணிவதில்லை
உலகின் நிலையின்மை கண்டவன்
கர்வம் கொள்வதில்லை
மனித வாழ்வின் இயற்கை அறிந்தவன்
சிறியோர் பெரியோர் பேதம் சொல்வதில்லை



5 கருத்துகள்: