புதன், 26 மார்ச், 2014

மீள்வேனோ


விண்ணில் மறைந்த நிலவை உன் 
கண்ணில் தேடினேன் 
உன்னில் தொலைந்த என்னை 
நான் என்னில் தேடினேன் 

நாணம் நிறைந்த பாவை உன் முகம் 
தவிர்த்து ஏனைய எல்லாம் மறந்தேன் 
சிந்தனை செய்து பார்த்தேன் 
அந்த விந்தை எனக்கு விளங்கவில்லை 

உன் கண்ணில் கரைந்த நான் 
இம்மண்ணில் புதையும் முன்னேனும் 
மீள்வேனோ!!!!!!!!

4 கருத்துகள்: